Thursday 18 August, 2011

Independence day 2011

Indian Independence Day was Celebrated in ShanmugaNagar Mannivakkam as usual in a Grand Scale. Nagar Children Participated in the Activities and Displayed their Skills. Here are some videos.




























Wednesday 9 February, 2011

செல்வ வினாயகர் கோவில் கும்பாபிஷேகம்

நமது நகரில் வாழும் தொழிலதிபரும் பல அறப்பனிகள் செய்து வருபராகவும் இருக்கும் திரு ரமேஷ் அவர்களின் இல்லம் அருகில் “அருள்மிகு செல்வவினாயகர்” ஆலய கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. அந்த நிகழ்சியினை திரு.B.J.மகேந்திரா அவர்கள் படம் பிடித்தார்.










Note: This posting is made for Mr.B.J.Mahendra's Request.

Monday 17 January, 2011

சண்முகா நகரில் சமத்துவ பொங்கல் 2011

பூக்கோலத்தோடு விழாக்கோலம்
மண்ணிவாக்கத்தின் சொர்க்கபுரியாம் நமது சண்முகாநகரிலே 16-01-2011 அன்று சமத்துவ பொங்கல் இதுவரை இல்லாத சீரோடும் சிறப்போடும் மிக பிரம்மாண்ட முறையிலே நமது நகர் மக்கள் அனைவராலும் சிறுவர் பூங்காவில் கொண்டாடப்பட்டது. நமது நகர் மகளிர் அனைவரும் இரவு பகலாக உழைத்து அழகான கோலங்கள் இட்டு விழா திடலை அலங்கரித்தனர்.

விழாத்திடல்
நகர் மக்களின் சிலம்பாட்டமும் பார்வையிடும் மக்களும்



ஆடவர்கள் அனைவரும் பொதுநல சங்கத்தினருடன் சேர்ந்து சுமார் ஒரு வார காலம் தங்கள் பங்களிபினை வழங்கி இந்த விழா மிகுந்த சிறப்பாக நடை பெற உழைத்தனர். திண்டுக்கல் இளைய நிலா தப்பாட்ட கலை குழுவினர் தங்கள் ஆட்டம் பாட்டங்களோடு இந்த பொங்கல் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.
அடுப்புகளை அருட்செல்வர் செல்வராஜ் பற்றவத்து துவக்குகிறார்.


பொங்கலோ பொங்கல்
விழாவிற்கு கடுமையாக உழைத்த வல்லவர்கள்
காட்சிகளை பதிவு செய்யும் சிவா அதை நோக்கும் ராகவன்.
தயாராகும் தப்பாட்ட கலைஞர்கள்.
கன்றை அடக்கும் காளை திரு.சுரேஷ்
மாட்டு வண்டி சவாரி
களை கட்டும் தப்பாட்டம்
பொங்கல் படையல்
மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.M.D.லோகநாதன் அவர்கள், துனைத்தலைவர் திரு.M.M. கிருஷ்ணன், திரு. பொண்ணுசாமி மற்றும் ஊராட்சிமன்ற உருப்பினர்கள், மற்றும் பிரபலமான அரசியல் தலைவர்கள் திரு. புருஷோத்தமன், திரு செல்வம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஞாயிறு போற்றும் திரு.லோகநாதன்
நமது நகரின் மகளிர் சுயஉதவி குழிவினர் ஒவ்வோர் குழுவினரும் ஒவ்வோர் பொங்கல் பானை வைத்து இயற்கைக்கு நன்று செலுத்தினர். தப்பாட்ட குழுவின் நடனம், மாட்டு வண்டி சவாரி, நகர் வாழ் குழந்தைகளின் கிராமிய நடனம் ஆகியவற்றை தொடர்ந்து சம பந்தி போஜனம் நடைபெற்றது. முடிச்சூர் ஆதீஸ்வரர் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள் இந்த சம பந்தி போஜனத்தில் இரண்டாம் ஆண்டாக வந்து பங்கேற்றனர்.
நகர் மக்களின் இயற்கை வழிபாடு
பெரியோர் வேடத்தில் சிறுவர்


மங்கையரின் ஆனந்த கும்மி

சிறுமிகளில் கிராமிய நடனம்
நடனம் களிக்கும் நகர் மாந்தர்


மனப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி வயக்காட்ட உழுது போடும் சிறுவர்கள்

சமபந்தி போஜனம்
சமபந்தி போஜனத்தில் கேப்டன் டிவி குழுவினர்
ஆதீஸ்வரர் இல்ல குழந்தைகள் உன்பதும் அவர்களுடன் பொது நல சங்க தலைவர் கோட்டீஸ்வரனும்
இந்த நிகழ்சிகளை எல்லம் ”கேப்டன் டிவி” குழிவினர் வந்து படம் பிடித்துக்கொண்டு சென்று தங்கள் கேப்டன் செய்திகளில் ஒளிபரப்பினர்.

ஒரு சில முக்கிய வீடியோ காட்சிகள் இங்கே

தப்பாட்டம்


நகர் மாந்தர் சிலம்பாட்டம்


மகளிர் குழுக்களின் சமத்துவ பொங்கல்




நகர் மக்கள் மாட்டு வண்டி சவாரி


மகளிர் சுய உதவி குழுவினர் கும்மி


ஆதீஸ்வரர் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள்